Monday, November 24, 2008

மனிதத்தின் கடவுள்கள் !

மனிதத்தின் கடவுள்கள் !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதன் கைதொட்ட கல்லெல்லாம் கடவுளாய் ,
ஏனோ மறந்துகூட மனிதம் படைக்க மறுத்துவிட்டன
மனிதத்தின் கடவுள்கள்.


திறக்கப்படாத உரிமை கதவுகள்

அடைக்கப்பட்ட உரிமை கதவு !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறார்கள்
தட்டினோம் ,கை வலிக்க தட்டினோம்
இதயம் வலிக்க தட்டினோம் ,
உயிர் வலிக்க தட்டினோம்
கடைசி வரை திறக்க படவில்லை
கதவுகள் மட்டும் .
கதவு என்று ஒன்று இருந்தால்
தானே தட்ட சொல்லுவார்கள்
முடிவு எடுத்துவிட்டோம்
கதவுகளை தட்டுவதற்காக
அல்ல உடைப்பதற்காக .
ஏன் திறக்கவில்லை என்று
இது வரை கேட்டிராத மனித கூட்டம்
உடைப்பதை தடுக்க வரிந்து
கட்டிக்கொண்டு வண்டியேறிவருகிறது
தடுப்பதிற்காக !.......