Tuesday, April 21, 2009

மவுனமும் மிகப்பெரிய தவறுதான் !

மவுனமும் மிகப்பெரிய தவறுதான் !
தவறி தவறு நான் செய்தேன்
தண்டனை என் ஒட்டுமொத்த இனத்திற்கு

எப்படி அந்ததவறுக்கு பரிகாரம் செய்வேன்
சிதறுண்ட உடல்களை தேடி புதைத்தா இல்லை
ஈழத்தில் ஓடும் குருதியில்
என்கறைபட்ட கைகளை கழுவியா
ஒன்றும் விளங்கவில்லை

ஒன்றுமட்டும் விளங்குகிறது
கடைசிவரை மனிதனாக மாறாமல்
மவுனமாகவே இருந்துவிடுவேனோ என்று !

Thursday, April 16, 2009

எதுவும் இல்லை !

எங்களிடம் இப்பொழுது எதுவும் இல்லையாம் ?!
ஆம் உண்மைதான்
இனியும் இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை
இனி இழந்துவிடுவோமோ என்றபயமும் இல்லை .
ஆனால் இழந்ததை மீட்டெடுக்கும் தைரியமும்
மீண்டும் பெறுவதற்கு எறாலமும் இருக்கிறது

படைநடத்தி வெல்ல வழி இல்லாத சிங்கள பேடிகள்
நச்சு புகைவீசி எங்களின் தலைமைகளையும்
தளிர்களையும் சாய்த்தது.

ஒருசேர
பன்னிரண்டு இழந்தபோதே பதறவில்லை
ஐந்து போனதற்கு அஞ்சிவிடுவோமா என்ன ?


தலைமைகளைதான் இழந்தோமேதவிர
தலைவனையும் தைரியத்தையும்
இழக்கவில்லை நாங்கள் .

கடைசி தமிழன் உள்ளவரை
தமிழீழ படை நடத்தி
வீரத்தால் பாடம் புகட்டுவோம் .

பொறுத்திரு திமிறி எழுந்து
திருப்பி அடிப்போம் !

முல்லைத்தீவும் ,கிளிநொச்சியும்,வன்னியையும்
அன்று இழந்த யாழ்ப்பாணத்தையும்
ஏன் உன் தலைநகரையும் சேர்த்து
மீட்டெடுக்கும் வீரம் எம்மிடம் உண்டு .

உன்னைப்போல் உலகநாடுகளிடம்
ஓடி ஓடி பிச்சைஎடுக்கும்
பேடிகள் அல்ல நாங்கள்

எதுவும் இல்லை ! ஆம்
இன்றுபோல் எதுவும் நிலையாக
இருந்துவிடபோவதும் இல்லை