Friday, December 19, 2008

இனியும் பதுங்கிப்பதுங்கி வாழ்வதற்கு பூனைகள் அல்ல,நாம் புலிகள்.

உங்களால் எங்களின்
கார்களைதான் எரிக்க முடியும்
எங்களின் வேர்களை அல்ல!

எரித்தது பார்பனனாக இருந்தாலும் சரி
அல்லது அடிப்படை அறிவு கூட இல்லாமல்
இந்திய இறையான்மையை கட்டி காக்கும்
காங்கிரசாக இருந்தாலும் சரி
எவனாக இருந்தாலும் அவனின்
வேரறுக்கும் நாள்வெகுவிரைவில் !
(நாடாளுமன்ற தேர்தல் )


வெந்ததை தின்று வயிற்றுக்காக
வாழ்ந்தது போதும் தமிழா !

வயிறை விட உயிரும் ,
உயிரை விட மானமும் பெரிது

இனமானம் உள்ள தமிழனாக போராட புறப்படு!
தமிழ் இன துரோகிகளை இனம் கண்டு துரத்திட புறப்படு!


தமிழர்களுக்கு வந்தாரை வாழவைக்கவும்
தெரியும் துரோகிகளை துரத்திடவும் தெரியும்
என்றுஅவர்களுக்கு நிருபிக்கவேண்டும்


எவன் தமிழையும் ,தமிழ் இனத்தையும்,
தமிழர் ஈழத்தையும் ஆதரிக்கிறானோ
அவனுக்கே நமது ஒட்டு.


தேர்தல் அரசியல்வாதிகளை அல்ல
தமிழை முன்னிலைப்படுத்தி இருக்கவேண்டும்


இனியும் பதுங்கிப்பதுங்கி வாழ்வதற்கு
பூனைகள் அல்ல நாம் புலிகள்.




Monday, November 24, 2008

மனிதத்தின் கடவுள்கள் !

மனிதத்தின் கடவுள்கள் !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதன் கைதொட்ட கல்லெல்லாம் கடவுளாய் ,
ஏனோ மறந்துகூட மனிதம் படைக்க மறுத்துவிட்டன
மனிதத்தின் கடவுள்கள்.


திறக்கப்படாத உரிமை கதவுகள்

அடைக்கப்பட்ட உரிமை கதவு !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறார்கள்
தட்டினோம் ,கை வலிக்க தட்டினோம்
இதயம் வலிக்க தட்டினோம் ,
உயிர் வலிக்க தட்டினோம்
கடைசி வரை திறக்க படவில்லை
கதவுகள் மட்டும் .
கதவு என்று ஒன்று இருந்தால்
தானே தட்ட சொல்லுவார்கள்
முடிவு எடுத்துவிட்டோம்
கதவுகளை தட்டுவதற்காக
அல்ல உடைப்பதற்காக .
ஏன் திறக்கவில்லை என்று
இது வரை கேட்டிராத மனித கூட்டம்
உடைப்பதை தடுக்க வரிந்து
கட்டிக்கொண்டு வண்டியேறிவருகிறது
தடுப்பதிற்காக !.......