Thursday, April 16, 2009

எதுவும் இல்லை !

எங்களிடம் இப்பொழுது எதுவும் இல்லையாம் ?!
ஆம் உண்மைதான்
இனியும் இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை
இனி இழந்துவிடுவோமோ என்றபயமும் இல்லை .
ஆனால் இழந்ததை மீட்டெடுக்கும் தைரியமும்
மீண்டும் பெறுவதற்கு எறாலமும் இருக்கிறது

படைநடத்தி வெல்ல வழி இல்லாத சிங்கள பேடிகள்
நச்சு புகைவீசி எங்களின் தலைமைகளையும்
தளிர்களையும் சாய்த்தது.

ஒருசேர
பன்னிரண்டு இழந்தபோதே பதறவில்லை
ஐந்து போனதற்கு அஞ்சிவிடுவோமா என்ன ?


தலைமைகளைதான் இழந்தோமேதவிர
தலைவனையும் தைரியத்தையும்
இழக்கவில்லை நாங்கள் .

கடைசி தமிழன் உள்ளவரை
தமிழீழ படை நடத்தி
வீரத்தால் பாடம் புகட்டுவோம் .

பொறுத்திரு திமிறி எழுந்து
திருப்பி அடிப்போம் !

முல்லைத்தீவும் ,கிளிநொச்சியும்,வன்னியையும்
அன்று இழந்த யாழ்ப்பாணத்தையும்
ஏன் உன் தலைநகரையும் சேர்த்து
மீட்டெடுக்கும் வீரம் எம்மிடம் உண்டு .

உன்னைப்போல் உலகநாடுகளிடம்
ஓடி ஓடி பிச்சைஎடுக்கும்
பேடிகள் அல்ல நாங்கள்

எதுவும் இல்லை ! ஆம்
இன்றுபோல் எதுவும் நிலையாக
இருந்துவிடபோவதும் இல்லை

No comments: