Tuesday, January 13, 2009

தை பிறந்தால் வழி பிறக்கும்

"தை பிறந்தால் வழி பிறக்கும்"
என்று சொல்லுவார்கள் ஆனால்
என் தமிழனுக்கு மட்டும்
ஒவ்வொரு வழியாய் அடைக்கப்படுகிறது.
அன்று யாழ்பாணம் பிறகு
வஞ்சகனின் சூழ்ச்சியால் வன்னி.
அண்டை நாட்டின் ஆதரவில் கிளிநொச்சி.
இன்று ஆனையிறவும் அடைத்தாகிவிட்டது
மிஞ்சி இருப்பது முல்லைத்தீவும்,
எம்மவர்களின் நம்பிக்கையும் மட்டும் தான் .
கடைசி தமிழன் இருக்கும் வரை
வழிகளை உருவாக்கி கொண்டே இருப்போம்.
உம்மை அண்டி அடங்கி அடிமை வாழ்கை
வாழ்வோம் என்று கனவுகானதே.

2 comments:

Sasirekha Ramachandran said...

//என் தமிழனுக்கு மட்டும்
ஒவ்வொரு வழியாய் அடைக்கப்படுகிறது//
உண்மையிலும் உண்மை.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//வஞ்சகனின் சூழ்ச்சியால் வன்னி.//

கருணாவையா குறிப்பிட்டீர்கள்?